திருத்தந்தையின் டுவிட்டர் பார்வையாளர் எண்ணிக்கை 1.7 கோடியைத் தாண்டியுள்ளது
டிச.15,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்திகளைப் பார்வையிடுபவர்களின்
எண்ணிக்கை, கடந்த சனிக்கிழமையோடு 1 கோடியே 70 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக திருப்பீட புள்ளிவிவரங்கள்
கூறுகின்றன. இஸ்பானியம், ஆங்கிலம், இத்தாலியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்ச், போலந்து,
இலத்தீன், ஜெர்மன், அரபு என ஒன்பது மொழிகளில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் வெளியிடும் டுவிட்டர் செய்தி, இதுவரை 1 கோடியே 78 இலட்சத்து 34 ஆயிரம் பேரால்
பார்வையிடப்பட்டுள்ளது. இந்த ஒன்பது மொழிகளுள், இஸ்பானிய மொழியிலான டுவிட்டர் செய்தி
மட்டும், 74 இலட்சத்து 15 ஆயிரத்து 305 பார்வையாளர்களைக் கொண்டு, முன்னணியில் உள்ளது. மேலும்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்திற்கான கானடாவின் புதிய தூதுவர் Denis Anthony
Savoie அவர்களிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று அவர் நியமனத்தை அங்கீகரித்தார்.
பாகிஸ்தான் நாட்டிற்கான திருப்பீடத்தூதர் பேராயர் Edgar Peña Parra அவர்களையும் இதே நாளில்
சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.