2014-12-12 15:40:38

மனித வர்த்தகர்களின் பைகளில் இரத்தக்கறை படிந்த பணம் நிரம்பியுள்ளது


டிச.12,2014. போதைப்பொருள் மற்றும் மனித வர்த்தகங்களை நடத்திவரும் திட்டமிட்டக் குற்றக்கும்பல்கள் தங்களின் பைகளில் இரத்தக்கறை படிந்த பணத்தைக் கொண்டிருக்கின்றனர் என்று, அர்ஜென்டீனா ஆயர் ஒருவர் கூறினார்.
இந்த வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள இவர்கள் நாட்டின் மற்றும் சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகளின் நிலப்பகுதியை ஊழலால் பெற்றுள்ளனர் என்று அர்ஜென்டீனா ஆயர்கள் பேரவையின் சமூகப்பணி ஆணையத் தலைவர் ஆயர் Jorge Lozano கூறினார்.
போதைப்பொருள் மற்றும் மனித வர்த்தகங்களின் பாதிப்புகள் குறித்த திருஅவையின் அக்கறை பற்றி, Argentine Dyn செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் ஆயர் Lozano.
போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால் சமூகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதோடு, போதைப்பொருள் வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கம் வளர்ந்துவருவதால் நாட்டின் அமைப்புமுறைகள் கெடுவதையும் காண முடிகின்றது என்றும் கூறியுள்ளார் ஆயர் Lozano.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.