2014-12-10 16:08:33

பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கொல்லப்படுவதே, இனப் படுகொலைகளின் அடிப்படை - ஐ.நா. உயர் அதிகாரி


டிச.10,2014. ஒருவர் செய்த செயலுக்காக அல்ல, மாறாக, அவரது பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கொல்லப்படுவதே இனப் படுகொலைகளின் அடிப்படை என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 10, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் உலக நாளையொட்டி, ஐ.நா. தலைமையகத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட, ஐ.நா. உயர் அதிகாரி Adama Dieng அவர்கள் இவ்வாறு கூறினார்.
பல்வேறு குழுக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்வதும், அவற்றில் உயிர் பலிகள் நிகழ்வதும் உணர்வுக் கொந்தளிப்பில் உருவாகும் இழப்புக்கள் என்று கூறிய Dieng அவர்கள், இனப்படுகொலைகளோ பல ஆண்டுகள் திட்டமிட்டு செய்யப்படும் கொடூரங்கள் என்று சுட்டிக்காட்டினார்.
இனப்படுகொலைகள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு அளவில், வெவ்வேறு கருத்தியல்களின் அடிப்படையில் நிகழ்ந்தவண்ணம் உள்ளன என்றும் Dieng அவர்கள் கவலை வெளியிட்டார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.