டிச.09,2014. அர்ஜென்டீனா கர்தினால் Jorge Maria Mejía அவர்கள் மரணமடைந்ததையொட்டி தனது
இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 91 வயதாகும் கர்தினால்
Maria Mejía அவர்கள் இத்திங்கள் இரவு உரோம் 11ம் பத்திநாதர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் ஐரெஸ் நகரில் 1923ம் ஆண்டில் பிறந்த கர்தினால் Maria Mejía
அவர்கள், திருப்பீடத்தின் நூலகம் மற்றும் ஆவணச் சுவடிகளின் முன்னாள் பொறுப்பாளர் ஆவார்.
கர்தினால் Maria Mejía அவர்களின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை
208 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை
112 ஆகவும் உள்ளன.