நேபாள அரசு ஊழல் ஒழிப்புச் செயலில் திருத்தந்தையைப் பின்பற்றி நடக்குமாறு வலியுறுத்தல்
டிச.06,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆடம்பரமற்ற எளிய வாழ்வு மற்றும் போலியில்லாத
வாழ்வுமுறையை, நேபாளத்தின் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் பின்பற்றி
நடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது அந்நாட்டின் ஊழல் ஒழிப்பு அமைப்பு. Transparency International
என்ற பன்னாட்டு நிறுவனத்தால், 2014ம் ஆண்டின் உலக ஊழல் குறியீடு கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதையொட்டி
இவ்வாறு வலியுறுத்தியுள்ள அவ்வமைப்பு, ஊழல் ஒழிப்புச் செயலில், நேபாள அரசு திருத்தந்தையைப்
பின்பற்றி நடக்குமாறு கேட்டுள்ளது. 2014ம் ஆண்டின் உலக ஊழல் குறியீடு கணிப்புப்படி,
நேபாளம் 126வது நிலையில் உள்ளது. இந்நாட்டின் நிலை கடந்த ஆண்டில் 116 என்று இருந்தது.
இதற்கிடையே, அண்மை மாதங்களில் நூற்றுக்கணக்கான ஊழல் அரசு அலுவலகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
எனினும், நாட்டில் ஊழல் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்று நேபாள புலன்விசாரணை அமைப்பு
கூறியுள்ளது.