திருத்தந்தை : நவீன அடிமைமுறை மானிடத்துக்கு எதிரான குற்றம்
டிச.02,2014. நவீன அடிமைமுறையை ஒழிப்பதற்கான அறிக்கையில் கையெழுத்திட்டு உரையாற்றிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், நவீன அடிமைமுறை மானிடத்துக்கு எதிரான குற்றம் என்று சாடி, அதற்கு
எதிரான தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தார். மேலும், “அடிமைகள் இனி இல்லை. நாம்
எல்லாரும் சகோதர சகோதரிகள். அடிமைமுறை ஒழிக்கப்படுவதாக” என்ற வார்த்தைகளை தனது டுவிட்டர்
செய்தியாக இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், “கடும்
வறுமையில் வாடுகின்றவர் மற்றும் துன்புறுவோர் தொடங்கி ஒவ்வொரு மனிதரோடும் அருகாமையில்
இருப்பதற்கு திருஅவை அழைக்கப்பட்டுள்ளது” என்ற மற்றொரு டுவிட்டர் செய்தியையும் இச்செவ்வாயன்று
வெளியிட்டுள்ளார் திருத்தந்தை. பிரான்சிஸ்.