2014-12-01 16:24:00

இந்தியாவில் ரயில் விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது


டிச.01,2014. இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் 18,735 பேர் இரயில் தண்டவாளத்தில் மரணடைந்துள்ளதாக இந்திய இரயில்வே அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இரயில் விபத்துக்களால் நாளொன்றுக்கு 60 பேர் இறப்பதாக இந்தப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றவேளை, இதில் மிகக் குறைந்த மரணங்களே, நேரடி இரயில் விபத்துக்கள் மூலமாக ஏற்படுகின்றன என்றும், பெரும்பாலான மரணங்கள் இரயில் பாதைகளை கடப்போர் இரயிலில் அடிபடுவதால் ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
புறநகர் இரயில்களை பயன்படுத்துவோர், நடை மேம்பாலங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டும் ஏராளமானோர் இரயில் தண்டவாளத்தைக் கடப்பதால், பல மரணங்கள் நிகழ்வதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகிலேயே சாலை விபத்துக்களில் அதிகம் பேர் இறக்கும் நாடாகவும் இந்தியா உள்ளது.

ஆதாரம் : பிபிசி








All the contents on this site are copyrighted ©.