2014-11-24 16:25:19

சென்னை உட்பட மூன்று நகரங்களில் விரைவில் குழந்தைகள் உதவி மையம்


நவ.24,2014. கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக, சென்னை, கொல்கத்தா, குர்கான் ஆகிய நகரங்களில், 24 மணிநேர உதவி மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.
சென்னை, கொல்கத்தா, குர்கான் ஆகிய நகரங்களில், 24 மணிநேரமும் செயல்படும், குழந்தைகள் உதவி மையம் விரைவில் அமைக்கப்படவுள்ள நிலையில், .இதனால், இந்த மையங்களைச் சுற்றியுள்ள, 500க்கும் அதிகமான நகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறுவர் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா கூறினார்.
கடத்தப்படும் குழந்தைகள், தெருவோரக் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் ஆகியோருக்காக, மும்பையை மையமாக வைத்து, 24 மணிநேர உதவி மையம், ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்பதுடன், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களும் இந்த மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு, உதவிகள் கோரி, அளவுக்கு அதிகமான அழைப்புகள் வருவதையொட்டி தற்போது இந்த புதிய மூன்று நகர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.