சமையல் தொடர்புடைய காற்று மாசுக்கேட்டால் உயிரிழப்புக்கள்
நவ.24,2014. சமையல் தொடர்புடைய காற்று மாசுக்கேட்டால் மக்கள் உயிரிழப்பதையும் நோயுறுவதையும்
தடுக்கும் நோக்கத்துடன், புதியத் திட்டங்களைத் தீட்டியுள்ளதாக ஐ.நா. நிறுவனம் அறிவிக்கிறது. ஒவ்வோர்
ஆண்டும் வீட்டிற்குள் சமையல் தொடர்புடைய காற்று மாசுக்கேட்டால் உலகில் 43 இலட்சம் பேர்
உயிரிழத்தல், 10 இலட்சம் பேர் நோயுறுதல் போன்றவை இடம்பெறும் சூழலில், மாசுக்கேடற்ற சமையல்
குறித்த தீர்வுகளுக்கு அரசுகள் உதவவேண்டும் என விண்ணப்பித்துள்ளது ஐ.நா. நிறுவனம். பாதுகாப்பான
சமையல் முறைகள் குறித்து 2020ம் ஆண்டிற்குள் 1 கோடி பேருக்கு உதவ உள்ளதாக ஐ.நா.வின் WFP
எனும் உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. புகை அதிகம் வெளியிடும் சமையல் முறைகளால்
வீட்டிலுள்ளோர் இதய நோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்
உள்ளது.