2014-11-24 16:26:40

கர்நாடகாவில் மீண்டும் ஒரு கிறிஸ்தவக் கோவில் மீது தாக்குதல்


நவ.24,2014. கர்நாடகா மாநிலத்தில் பெந்தகோஸ்தே கோவில் ஒன்று இந்து தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு எட்டுபேர் காயமடைந்துள்ளது குறித்து, தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர் சாஜன் ஜார்ஜ்.
கர்நாடகாவின் கங்கமப்பாளயா எனுமிடத்திலுள்ள கல்வாரி அப்போஸ்தலிக்க கோவிலினுள் புகுந்த இந்து தீவிரவாதிகள், கோவில் பொருட்களைச் சேதப்படுத்தியதுடன், அங்குச் செபித்துக்கொண்டிருந்தவர்களையும் தாக்கியதில், எட்டுபேர் காயமடைந்துள்ளனர்.
இரு கிறிஸ்தவர்களின் கால்களை உடைத்த இக்குழு, சேதமாக்கப்பட்டக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பக்கூடாது என்ற எச்சரிக்கையையும் விட்டுச் சென்றுள்ளது.
அருகிலேயே காவல் நிலையத்தில் இருந்த காவல் துறையினர், இத்தாக்குதலைத் தடுக்கத் தவறியதுடன், அக்கோவிலின் கிறிஸ்தவப் போதகர் டி’சூசா அவர்களையும் வலுக்கட்டாயமாக விசாரணைக்கென காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

ஆதாரம் : Asia News








All the contents on this site are copyrighted ©.