அமைதி மற்றும் ஒப்புரவிற்கென மொசாம்பிக் அரசு நிதி ஒதுக்கீடு
நவ.24,2014. மொசாம்பிக் நாட்டின் RENAMO புரட்சியாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்
அடிப்படையில் 'அமைதி மற்றும் தேசிய ஒப்புரவு' பணிகளுக்கென நிதி ஒன்றை உருவாக்கியுள்ளது
அந்நாட்டு அரசு. ஏறத்தாழ ஒரு இலட்சம் முன்னாள் இராணுவ வீரர்களின் சமூக மற்றும் பொருளாதார
நிலைகளை மேம்படுத்தவும், ஆயுதங்களைக் கைவிட்டுள்ள RENAMO புரட்சியாளர்களுக்கு மறுவாழ்வு
வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அமைதிப் பேச்சுவார்த்தைகளில்
முழு ஈடுபாட்டுடன் பங்குபெற்று, தற்போது அமைதித் தீர்மானங்களைச் செயல்படுத்துவதிலும்
ஆர்வம் காட்டிவரும் புரட்சியாளர் பிரதிநிதிக் குழுவுக்கும் நிதியுதவிகள் வழங்கப்படும்
என மொசாம்பிக் அரசு அறிவித்துள்ளது.