2014-11-21 16:04:39

வத்திக்கான் புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள, இந்திய அரசின் சார்பில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு


நவ.21,2014. நவம்பர் 23, இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடைபெறவிருக்கும் புனிதர் பட்டமளிப்பு விழாவிற்கு, இந்திய அரசின் சார்பில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழுவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுப்பிவைக்க இசைந்துள்ளதற்கு, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Baselios Cleemis அவர்கள் அனுப்பியிருந்த வேண்டுகோளை ஏற்று, பிரதமர் மோடி அவர்கள், இந்திய மேலவையின் துணைத் தலைவர், முனைவர் பி.ஜே. குரியன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அனுப்ப இசைந்துள்ளார்.
இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் ஆறு பேரில், முத்திப்பேறு பெற்ற Kuriakose Elias Chavara அவர்களும், அவர்களும் Euphrasia Eluvanthingal இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இவ்விருவரையும் புனிதர் நிலைக்கு உயர்த்தும் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றும் இஞ்ஞாயிறன்று, இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்கள் தங்கள் பங்குக் கோவில்களில் சிறப்பு செபங்களை மேற்கொள்ள, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை சிறப்பு அழைப்பொன்றை விடுத்துள்ளது.

ஆதாரம் : CBCI








All the contents on this site are copyrighted ©.