திருத்தந்தையின் வாழ்த்து - ஆசிய நாடுகளில், நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வம் அதிகரிக்க
வேண்டும்
நவ.19,2014. ஆசிய நாடுகளில், நற்செய்தியை அறிவிக்கும் பணியில், திருத்தூதருக்குரிய ஆர்வம்
அதிகரிக்க வேண்டும் என்ற தன் வாழ்த்துக்களையும், செபங்களையும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் அனுப்பியுள்ளார். “ஆசியாவில் மறைபரப்புப்பணி: திருத்தந்தை 2ம் ஜான்பால் முதல்,
திருத்தந்தை பிரான்சிஸ் வரை” என்ற தலைப்பில், நவம்பர் 18, இச்செவ்வாயன்று, உரோம் நகரில்,
ஆசிய செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியிருந்த
வாழ்த்துத் தந்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு,
அன்னை மரியாவின் பரிந்துரையால் இறைவனின் விண்ணகக் கொடைகள் அனைத்தும் கிடைக்குமாறு திருத்தந்தை
வாழ்த்தியிருந்த இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள்
அனுப்பியிருந்தார். இந்த ஒரு நாள் கருத்தரங்கில், மணிலா பேராயர், கர்தினால் அந்தோனியோ
தாக்லே, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் உட்பட பலர் கருத்துரைகள் வழங்கினர்.