உள்ளார்ந்த அமைதியை வலியுறுத்தும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
நவ.18,2014. 'உலகில் பெருமளவான இரைச்சல்கள் காணப்படுகின்றன! நம் இதயங்களிலும் இறைவன்
முன்னிலையிலும் அமைதியாய் இருக்கக் கற்றுக்கொள்வோமாக' என இச்செவ்வாய்க்கிழமை தன் டுவிட்டரில்
குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலியம், இலத்தீன், இஸ்பானியம், போலந்து,
ஆங்கிலம், ஜெர்மன், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், அரபு என 9 மொழிகளில் ஏறத்தாழ ஒவ்வொரு
நாளும் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய்க்கிழமையன்று
விடுத்துள்ள செய்தியில், உள்ளார்ந்த அமைதியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.