2014-11-17 15:41:44

திருத்தந்தை : பேச்சுவார்த்தை மூலம் குடியேற்றதாரர் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்


நவ.17,2014. உரோம் நகரிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுவரும் குடியேற்றதாரர் குறித்த பதட்டநிலைகள் குறித்து, தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரில் மட்டுமல்ல, பல ஐரோப்பிய நகர்களிலும் இடம்பெறும் இத்தகைய பதட்டநிலைகளுக்கு அமைதியான தீர்வுகாண அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும் என விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய பதட்ட நிலைகள் உடனடியாக கவனிக்கப்பட்டு தீர்வு காணப்படவில்லையெனில், மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார்.
மோதல்களின் மத்தியிலும் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடிமக்களும் குடியேற்றதாரர்களும், பொறுப்புடைய அதிகாரிகளின் முன்னிலையில் ஒருவருக்கொருவர் செவிமடுத்து, ஒன்றிணைந்து திட்டங்களைத் தீட்டுவதன் மூலம் அமைதிவாழ்வை உருவாக்கமுடியும் எனவும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.