2014-11-15 16:09:53

திருத்தந்தை : ஒரு கிறிஸ்தவர் மற்றவருக்கு அமைதியை அளிக்கிறார்


நவ.15,2014. “ஒரு கிறிஸ்தவர் மற்றவருக்கு அமைதியைக் கொண்டு வருகிறார், அமைதியை மட்டுமல்ல, அன்பு, கனிவு, பிரமாணிக்கம் மற்றும் மகிழ்வையும் கொண்டு வருகிறார்” என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், மியான்மாரில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் ஐந்தாம் நூற்றாண்டு கொண்டாட்டங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள் கலந்து கொள்கிறார்.
தலைநகர் யாங்கூனில் இந்த நவம்பர் 21 முதல் 23 வரை இந்த 500ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இன்னும், இம்மாதம் 30ம் தேதியன்று தொடங்கும் உலக கத்தோலிக்க துறவிகள் ஆண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பாக, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி ஆரம்பித்து வைக்கிறார் கர்தினால் João Braz de Aviz.
துறவிகள் பேராயத் தலைவராகிய கர்தினால் João Braz de Aviz அவர்கள், இந்த நவம்பர் 30ம் தேதி காலை பத்து மணிக்கு இத்திருப்பலியை நிறைவேற்றுவார். உலக கத்தோலிக்க அர்ப்பணிக்கப்பட்ட துறவிகள் ஆண்டு, 2015ம் ஆண்டு நவம்பரில் நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.