புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் Chavara Kuriakoseஅவர்களின்
திருத்தலத்தில் முழு வீச்சில் சீரமைப்புப் பணிகள்
நவ.13,2014. முத்திப்பேறு பெற்ற அருள்பணியாளர் Chavara Kuriakose Elias அவர்கள், நவம்பர்
23, ஞாயிறன்று, வத்திக்கானில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் நிகழ்வையொட்டி,
அவரது பெயரால் நிறுவப்பட்டுள்ள திருத்தலத்தில் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று
வருகின்றன. முத்திப்பேறு பெற்ற அருள் பணியாளர் Chavara Kuriakose அவர்களின் உடல் புதைக்கப்பட்டுள்ள
மண்ணனம் துறவு மடத்தில், அவரது உருவச்சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. மண்ணனம்
மடத்திற்கு திருப்பயணிகள் எளிதில் வந்துசெல்லும் வகையில், கோட்டயம் மண்ணனம் என்ற ஊர்களுக்கு
இடையே உள்ள சாலைகளை, கேரள அரசு சீரமைத்து வருகிறது. நவம்பர் 23ம் தேதி, வத்திக்கானில்,
முத்திப்பேறு பெற்ற Chavara Kuriakose, மற்றும் அருள் சகோதரி Euphrasia ஆகியோருக்கு வழங்கப்படவுள்ள
புனிதர் பட்டமளிப்பு விழாவையொட்டி, முத்திப்பேறு பெற்ற அருள் பணியாளர் அவர்களின் திருத்தலத்திற்கு
50,000க்கும் அதிகமான திருப்பயணிகள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.