இஸ்பெயின் பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் அனுதாபத் தந்தி
கடந்த சனிக்கிழமையன்று இரவு இஸ்பெயினின் தென்கிழக்கு நகரான Bullas அருகே இடம்பெற்ற பேருந்து
விபத்து குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழந்த கவலையை வெளியிடும் இரங்கல்
தந்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின். Bullas நகர்
அருள்பணியாளர் ஒருவர் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ள, மற்றும் 28 பேர் காயமடைந்துள்ள இந்த
பேருந்து விபத்து குறித்து Cartagena ஆயர் Jose Manuel Lorca Planes அவர்களுக்கு, திருத்தந்தையின்
பெயரால் திருப்பீடச் செயலர் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான
திருத்தந்தையின் செபத்திற்கு உறுதி கூறப்பட்டுள்ளதுடன், காயமடைந்தோர் மற்றும் உறவினர்களை
இழந்தோருக்கு ஆறுதல் வார்த்தைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.