நேர்காணல்––நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம்-பாகம் 2
நவ.06,2014. சென்னையில் அறிவியல் நகரின் துணைத் தலைவராகப் பணியாற்றி வருபவர் இந்திய ஆட்சிப்பணி
அலுவலகர்(ஐ.ஏ.எஸ்.)திரு. உ.சகாயம். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்து, கிரானைட்
மற்றும் தாதுமணல் ஊழல் குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும், கடந்த அக்டோபர் 31ம்
தேதிக்குள் சகாயம் அவர்கள் தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கடந்த
செப்டம்பர் 11ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது. அதன்பின்னர்,
சகாயம் அவர்கள் தலைமையில் குழுவை அமைத்து கடந்த ஒன்றாந்தேதி தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால்,
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் ஊழல் குறித்து மட்டும் விசாரணை நடத்தினால் போதுமானது
என்று இந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு அரசின்
கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது பணியை நேர்மையுடன் செய்வதில் உறுதியாய் இருக்கிறார்
ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. உ.சகாயம். இவர் வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய தொலைபேசி பேட்டியின்
முதல் பகுதியை கடந்த வாரம் ஒலிபரப்பினோம். இன்று அதன் தொடர்ச்சியை ஒலிபரப்புகிறோம்.