திருத்தந்தைக்கு, “சுதந்திரத்துக்கான Shahbaz Bhatti” விருது
நவ.08,2014. “நற்செய்தியை அறிவிப்பதற்குப் புதிய வழிகளைத் தேடுவதில் திருஅவை எப்பொழுதும்
பயணத்தில் உள்ளது” என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, “சுதந்திரத்துக்கான
Shahbaz Bhatti” விருதை வழங்கியுள்ளார் உலக இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின்
பொதுச் செயலர் Geoff Tunnicliffe. உலக இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் பிரதிநிதிகள்
இவ்வியாழனன்று வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது, கிறிஸ்தவர்களிடையே
ஒன்றிப்பு ஏற்படுவதற்கு திருத்தந்தை எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் சிறுபான்மை மத்தவரின் அமைச்சராகப் பணியாற்றிய Shahbaz Bhatti அவர்கள்,
2011ம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.