நேர்காணல்––நேர்மை ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம்-பாகம் 1
அக்.30,2014. இந்திய ஆட்சிப்பணி அலுவலகர்(ஐ.ஏ.எஸ்.)திரு. உ.சகாயம் அவர்கள், தனது 23 வருடப்
பணிக்காலத்தில் 24 தடவைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது சென்னையில் அறிவியல்
நகரின் துணைத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள்
உள்ளிட்ட கனிமக் குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரி சகாயம் அவர்கள் தலைமையிலான குழுவை
அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி ஆணையிட்டது.
அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை இரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல்
செய்த சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதோடு, தமிழக அரசுக்கு
ரூ.10,000 அபராதமும் விதித்துள்ளது. இச்சூழலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் அவர்களைத்
தொலைபேசியில் தொடர்புகொண்டோம்.