2014-10-29 15:37:17

'செனெகலின் நம்பிக்கை வானொலி' - கத்தோலிக்கத் திருஅவை முயற்சி


அக்.29,2014. ஆப்ரிக்காவின் Senegal நாட்டில், கத்தோலிக்கத் திருஅவை அண்மையில் வானொலியைத் துவக்கியுள்ளது.
Dakar உயர்மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் Theodore Adrien Sarr அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்ட இந்த வானொலி, 'செனெகலின் நம்பிக்கை வானொலி' என்ற பெயருடன் இயங்குகிறது.
உண்மை, தாராள மனம், அழகு ஆகிய உயர்ந்த பண்புகளைப் பயில்வதென்பது, இந்நாட்டின் இளையோரிடையே உள்ள பல தேவைகளில் மிக முக்கியமான தேவை, என்று கர்தினால் Sarr அவர்கள் இந்த அர்ச்சிப்பு விழாவின்போது கூறினார்.
உண்மையான, ஒளிவுமறைவற்ற செய்திகளை வெளியிடும் துணிவை ஊடகங்கள் கொண்டிருக்கவேண்டும் என்ற கருத்தை, 'செனெகலின் நம்பிக்கை வானொலி' செயல்படுத்தும் என்ற நம்பிக்கையை, கர்தினால் Sarr அவர்கள் வெளிப்படுத்தினார்.
Dakar உயர்மறை மாவட்டமும், கிறிஸ்தவத் தலைவர்கள், வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் 'செனெகலின் நம்பிக்கை வானொலி', 2013ம் ஆண்டு மேமாதம் முதல் தன் ஒலிபரப்பைத் துவங்கியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.