டுவிட்டரில் திருத்தந்தை : கிறிஸ்தவச் செய்தி -அன்பு மற்றும் கருணை
அக்.28,2014. “அன்பு மற்றும் கருணை என்ற கிறிஸ்தவச் செய்தியின் மகிழ்ச்சியை மக்கள் கண்டுகொள்வதற்கு
நாம் உதவுவோம்”என்ற வார்த்தைகளை இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். மேலும், அனைத்துப் புனிதர்கள் விழாவான நவம்பர் முதல் நாள் சனிக்கிழமை
மாலை 4 மணிக்கு உரோம் Verano கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்றி, கல்லறைகளை ஆசீர்வதிப்பார்
திருத்தந்தை பிரான்சிஸ். அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான நவம்பர் இரண்டாம் தேதி,
இறந்த எல்லாத் திருத்தந்தையரின் நிறைசாந்திக்காக, வத்திக்கான் கெபியில் திருப்பலி நிகழ்த்துவார்
திருத்தந்தை. கடந்த ஆண்டில் இறந்த அனைத்துக் கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம
இளைப்பாற்றிக்காக, வத்திக்கான் பசிலிக்காவில் நவம்பர் மூன்றாம் தேதி திருப்பலி நிறைவேற்றுவார்
திருத்தந்தை.