மனிதர் இயல்பிலே ஒரு சமூக உயிர் என்ற புரிதலே இக்காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது
அக்.25,2014. மனிதர் இயல்பிலே ஒரு சமூக உயிர் என்ற புரிதலையே, தற்போதைய பொருளாதார மற்றும்
வளர்ச்சித் திட்டங்கள் அச்சுறுத்தி வருகின்றன என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ
பரோலின் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறினார். உரோம் Notre Dame Global Gateway பல்கலைக்கழகத்தில்
இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, மனித மாண்பும், மனித வளர்ச்சியும் என்ற தலைப்பிலான மூன்று
நாள் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார். நமது
இக்காலத்திய சிந்தனைகளில், பொருளாதாரங்களை ஓர் அறிவியலாக நோக்கும் போக்குத் தெரிகின்றது,
அதாவது, பொருள்களும் நிகழ்வுகளும் மனித உணர்வில் புரிந்துகொள்ளப்படுவதை அடிப்படையாகக்
கொண்ட மெய்யியலாகத் தெரிகின்றது என்றும் கூறினார் கர்தினால் பரோலின். மாறாக, ஒருங்கிணைந்த
மனித வளர்ச்சிக்குத் பெரும் தடைகளாய் இருப்பவை மனித மாண்புக்கு அச்சுறுத்தலை முன்வைக்கும்
மனித மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளில் காணப்படுகின்றன என்று திருஅவையின் போதனைகள்
தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.