2014-10-25 15:50:11

திருத்தந்தை, Schoenstatt அன்னை மரியா இயக்கத்தினர் சந்திப்பு


அக்.25,2014. கிறிஸ்தவக் குடும்பங்களும், திருமணங்களும் இக்காலத்தைப் போல் எக்காலத்திலும் இந்த அளவுக்கு நேரடியாகத் தாக்கப்பட்டதில்லை என்று இச்சனிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Schoenstatt அப்போஸ்தலிக்க அன்னை மரியா இயக்கத்தின் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட அங்கத்தினர்களை வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதில்சொல்லி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமண அருளடையாளத்தைச் சமூகச் சடங்குமுறையாகக் குறைக்க முடியாது என்றுரைத்த திருத்தந்தை, இளையோரைத் திருமணத்துக்குத் தயாரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு, திருமணம் என்றால் என்ன என்பதன் உண்மையான பொருள் தெரியாமல் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர் என்றும் கூறினார்.
Schoenstatt அப்போஸ்தலிக்க அன்னை மரியா இயக்கம், கத்தோலிக்கத் திருஅவையில் புதுப்பித்தலை ஏற்படுத்துவதற்காக 1941ம் ஆண்டில் ஜெர்மனியின் Schoenstatt என்ற ஊரில் அருள்பணியாளர் Joseph Kentenich அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. Schoenstatt என்றால் அழகான இடம் என்று பொருள். இதன் நூறாம் ஆண்டின் நிறைவாக உரோமையில் திருப்பயணம் மேற்கொண்டு திருத்தந்தையையும் இச்சனிக்கிழமையன்று சந்தித்தனர்.
அருள்பணியாளர் Joseph Kentenich அவர்கள், 1941ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு Dachau வதைப்போர் முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு இருந்த இத்தாலிய, போலந்து, செக் இன்னும் பிற நாட்டினரிடம் Schoenstatt பக்தியை இவர் பரப்பினார். இவ்வியக்கம், அன்னை மரியாவின் அன்பு மற்றும் தூய்மையை வலியுறுத்தி அன்னைமரியா பக்தியைப் பரப்பி வருபகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.