2014-10-24 15:33:52

நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அசாம் முதல்வருக்கு வேண்டுகோள்


அக்.24,2014. இந்தியாவின் அசாம் மற்றும் நாகாலாந்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியையும், இயல்புநிலை வாழ்க்கையையும் அமைத்துக் கொடுப்பதற்கு முயற்சிகளை எடுக்குமாறு அசாம் முதல்வரை வலியுறுத்தியுள்ளனர் அமைதி ஆர்வலர்கள்.
அசாம் மற்றும் நாகாலாந்தில் அமைதிக்காக உழைக்கும் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் அசாம் மாநில முதல்வர் Tarun Gogoi அவர்களை, இவ்வாரத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கேட்டுக்கொண்டனர்.
அசாம் மற்றும் நாகாலாந்தில், இனப்பிரச்சனை மனிதாபிமான கண்ணோட்டத்தில் நோக்கப்பட வேண்டுமென்றும், அப்பகுதியில் முன்பிருந்த நிலையை அமைப்பதில் கடும் முயற்சிகளை எடுக்குமாறும் அத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமைதிக்கான நடவடிக்கைகள் கிராமத் தலைவர்களை உள்ளடக்கியதாய், சாதாரண மக்களிலிருந்து தொடங்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.

ஆதாரம் : Assam tribune







All the contents on this site are copyrighted ©.