2014-10-24 15:33:13

திருத்தந்தையின் நவம்பர் திருவழிபாட்டு நிகழ்வுகள்


அக்.24,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், நவம்பர் மாத நிகழ்வுகளை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு குய்தோ மரினி.
அனைத்துப் புனிதர்கள் விழாவான நவம்பர் முதல் நாள் உரோம் Verano கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி, இறந்த எல்லாத் திருத்தந்தையரின் நிறைசாந்திக்காக, அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளான நவம்பர் இரண்டாம் தேதி வத்திக்கான் கெபியில் திருப்பலி, கடந்த ஆண்டில் இறந்த அனைத்துக் கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக, வத்திக்கான் பசிலிக்காவில் மூன்றாம் தேதி திருப்பலி ஆகியவை திருத்தந்தையின் திருவழிபாட்டு நிகழ்வுகளாகும்.
மேலும், நவம்பர் 23, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், கேரளாவின் Kuriakose Elias Chavara, Eufrasia Eluvathingal உட்பட ஆறு அருளாளர்களுக்குப் (Giovanni Antonio Farina, Ludovico da Casoria, Nicola da Longobardi, Amato Ronconi) புனிதர் பட்டமளிப்புத் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை.
நவம்பர் 28 முதல் 30 வரை துருக்கியில் திருப்பயணம் மேற்கொள்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.