2014-10-21 15:51:08

ஆறு வயது இந்தியச் சிறுவன் உலக சாதனை


அக்.21,2014. நேபாளத்திலுள்ள 5,554 மீட்டர் உயரமான கல்பதரு மலைச்சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்துள்ளான் ஆறு வயது இந்தியச் சிறுவன் ஒருவன்.
ஹர்ஷித் சவுமித்ரா என்ற 6 வயது சிறுவன், இம்மாதம் 7ம் தேதி எவரெஸ்ட் மலை முகாம்வரை ஹெலிகாப்டரில் சென்று, பின்னர் அங்கிருந்து 10 நாட்களில் கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளான். இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்தியச் சிறுவன் கல்பதரு சிகரத்தில் ஏறியதுதான் சாதனையாக இருந்தது. அதனை ஹர்ஷித் முறியடித்துள்ளான்.
மலை ஏறும் வீரரான ராஜீவ் சவுமித்ரா என்பவரின் மகனான ஹர்ஷித் சவுமித்ரா, இந்தச் சாதனையைப் புரிந்துள்ளான். இதில் ஏறுவதற்காக அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் சென்றான்.
இந்தச் சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது. கின்னஸ் சாதனைக்காகவும் இந்த ஆதாரங்களை அனுப்ப உள்ளதாக அவனது தந்தை தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : தமிழ்வின்







All the contents on this site are copyrighted ©.