2014-10-18 15:33:29

திருத்தந்தை பிரான்சிஸ், வியட்னாம் பிரதமர் சந்திப்பு


அக்.18,2014. வியட்னாம் கம்யூனிசக் குடியரசின் பிரதமர் Nguyen Tan Dung அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் வியட்னாம் பிரதமர் Nguyen Tan Dung.
மேலும், “உலகை மாற்ற வேண்டுமானால், நாம் செய்யும் காரியங்களுக்குத் திருப்பிச் செய்ய இயலாதவர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்” என்று, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், தென் கொரிய அரசுத்தலைவர் Park Geun-hyen-hye அவர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் திருத்தந்தையின் "நம்பிக்கை ஒருபோதும் நம்மை ஏமாற்றாது" என்ற வார்த்தைகள் தன்னை மிகவும் கவர்ந்ததாகப் பத்திரிகையாளர்களிடம் கூறினார் தென் கொரிய அரசுத்தலைவர்.
இவர் 13 பேருடன் திருத்தந்தையைச் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.