2014-10-16 15:58:34

ஈராக் நாட்டின் பழமை வாய்ந்த Mar Behnam துறவு மடம் ISIS தீவிரவாதிகளால் அழிவு


அக்.16,2014. ஈராக் நாட்டின் கரகோஷ் (Qaraqosh) நகருக்கு அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புள்ள பழமை வாய்ந்த Mar Behnam துறவு மடத்தை ISIS தீவிரவாதக் குழுவினர் கைப்பற்றி அழிவுச் செயல்களை மேற்கொண்டுள்ளனர்.
4ம் நூற்றாண்டு முதல் புகழ் பெற்றுள்ள இந்த மடத்தின் சிலுவையை அகற்றியதுடன், அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த பல பழமை வாய்ந்த சுவடிகளையும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர் என்று அருள்பணி Nizar Semaan அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அசீரியாவின் புகழ்பெற்ற இளவரசரும், மறைசாட்சியுமான Behnam மற்றும் அவரது சகோதரி Sarah ஆகிய இருவரின் நினைவாக எழுப்பப்பட்ட இந்தத் துறவு மடம், பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.
கரகோஷ் நகரை கடந்த ஜூலை மாதம் கைப்பற்றிய ISIS தீவிரவாதிகள், இம்மடத்தில் வாழ்ந்த துறவிகளையும், கிறிஸ்தவர்களையும் ஜூலை 20ம் தேதி வெளியேற்றினர்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.