2014-10-11 15:59:36

பிலிப்பீன்ஸ் தலத்திருஅவையில் “ஏழைகள் ஆண்டு”


அக்.11,2014. வருகிற சனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கும்வேளை, வருகிற நவம்பரில் “ஏழைகள் ஆண்டை” ஆரம்பிக்கவுள்ளது பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை.
பொதுநிலையினர் ஆண்டைச் சிறப்பித்துவரும் பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை, வருகிற நவம்பர் 23ம் தேதியன்று ஏழைகள் ஆண்டை ஆரம்பிக்கவுள்ளது.
சமுதாயத்தில் நலிந்தோர் மற்றும் வாய்ப்பிழந்தோருக்கு ஆதரவாகத் தொடங்கப்படும் ஏழைகள் ஆண்டில், அடுத்தவருக்குக் கொடுங்கள் என்ற வேண்டுகோளுடன் நிதி திரட்டும் திட்டமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏழைகள் ஆண்டில் 4 கோடி பேசோஸ் பணம் திரட்டி ஏழைகளுக்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிலிப்பீன்ஸ் நாட்டுக்கானத் திருப்பயணம் 2015ம் ஆண்டு சனவரி 15 முதல் 19 வரை நடைபெறும்.

ஆதாரம் : CBCP







All the contents on this site are copyrighted ©.