அக்.11,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டதைக்
கொண்டாடும் நோக்கத்தில் அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்துள்ளது தென் கொரியத் தலத்திருஅவை திருத்தந்தையின்
தென் கொரியத் திருப்பயண நிகழ்வுகளைக் கொண்டுள்ள புகைப்பட அருங்காட்சியகம், கொரியக் கத்தோலிக்கருக்கு,
திருத்தந்தை போதிக்க விரும்பும் முக்கிய பாடங்களை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கும்
என்று செயோல் உயர்மறைமாவட்டம் தெரிவித்தது. 124 கொரிய மறைசாட்சிகளுக்கு முத்திப்பேறு
பட்டமளிப்பு விழாவின்போது திருத்தந்தை பயன்படுத்திய உடைகளும் இதில் வைக்கப்பட்டிருக்கும்.
இம்மாதம் 15ம் தேதியிலிருந்து இந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்படும்.