2014-10-09 16:42:50

திருத்தந்தை : இளையோர், தமது அன்பின் சாட்சிகளாக இருக்குமாறு கிறிஸ்து எதிர்பார்க்கிறார்


அக்.09,2014. “அன்பு இளையோரே, கிறிஸ்து உங்களைத் தம் நண்பர்களாகப் பாவித்து அவரது முடிவில்லாத அன்பின் சாட்சிகளாக இருக்குமாறு எதிர்பார்க்கிறார்” என்ற வார்த்தைகளைத் இவ்வியாழனன்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அக்டோபர் 12, வருகிற ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கானடா நாட்டுப் புனிதர்கள் Francis de Laval, Mary of the Incarnation ஆகிய இருவருக்கும் நன்றித் திருப்பலி நிறைவேற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் கடந்த ஏப்ரல் 3ம் தேதி புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.