அக்.08,2014. நைஜீரிய நாட்டின் Maiduguri மறைமாவட்டத்தில் Boko Haram இஸ்லாமியத் தீவிரவாத
அமைப்பினரின் வன்முறையால் கடந்த இரு மாதங்களில் 185 ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன
மற்றும் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வட
நைஜீரியாவிலுள்ள Maiduguri மறைமாவட்டத்தில் Boko Haram அமைப்பினரின் வன்முறையால் கடந்த
இரு மாதங்களில் இடம்பெற்றுள்ள அழிவுகள் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய,
அம்மறைமாவட்ட சமூகத்தொடர்பு பணிக்குழு இயக்குனர் அருள்பணி Gideon Obasogie இதனைத் தெரிவித்தார். கடந்த
30 நாள்களில் நான்கு நகரங்களிலுள்ள ஆலயங்கள் Boko Haram பயங்கரவாதிகளால் சூறையாடப்பட்டுள்ளன
எனவும் அருள்பணி Obasogie தெரிவித்தார். மேலும், Boko Haram வன்முறை குறித்துப் பேசிய
அம்மறைமாவட்ட ஆயர் Oliver Dashe Doeme அவர்கள், கடந்த இரு மாதங்களில் தனது மறைமாவட்டத்தின்
11 நகரங்களை, அந்த அமைப்பினர் கைப்பற்றியுள்ளனர் எனக் கூறினார்.