திருத்தந்தை : மத்திய கிழக்குப் பகுதிக்கென கர்தினால்கள் கூட்டம் அக்.20
அக்.07,2014. மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து
விவாதிப்பதற்கென கர்தினால்கள் மற்றும் முதுபெரும் தந்தையர்களைக் கொண்டு, கூட்டம் ஒன்றை
நடத்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். புனிதபூமிக் காவலரான கப்புச்சின் துறவு சபை
அருள்பணியாளரும் சிரியாவின் Knayeh பங்குத்தந்தையுமான Hanna Jalloufவுடன் கிறிஸ்தவக்
கிராமத்தைச் சேர்ந்த பல கிறிஸ்தவர்கள், Jahbat Al-Nusra தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய
ஆட்களால் கடந்த ஞாயிறு இரவு கடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்ததை முன்னிட்டு இக்கூட்டத்தை
அறிவித்துள்ளார் திருத்தந்தை. இக்கூட்டம் வத்திக்கானில் இம்மாதம் 20ம் தேதி நடைபெறும்.