அக்.06,2014. ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளால் கடந்த சனவரியிலிருந்து இதுவரை 9,347 பேர்
இறந்துள்ளதாகவும், 17,386 பேர் காயமடந்துள்ளதாகவும் ஐ.நா. நிறுவனம் அறிவித்தது. வன்முறைகளால்
நேரடியாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இது என்றும், வன்முறையின் பாதிப்புகளால் போதிய
உணவின்றியும், மருத்துவ வசதிகளின்றியும் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட பெருமெண்ணிக்கையில்
இருக்கலாம் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகின்றது. மேலும், இஸ்லாமிய நாடு என்ற குரலுடன்
இயங்கிவரும் தீவிரவாதக் குழுவின் வன்முறை நடவடிக்கைகள், போர்க்குற்றங்கள் என்றும், மனிதகுலத்திற்கு
எதிரானக் குற்றங்கள் எனவும் வரையறுக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஐ.நா.வின் மனித உரிமைகள்
அலுவலகம் தெரிவித்தது.