2014-10-03 16:18:22

நகர்ப்புறச் சேரி ஏழைகளின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றப்பட வேண்டும்


அக்.03,2014. உலகின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் நகர்ப்புறச் சேரிகளில் வாழும்வேளை, நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது என்று ஐ.நா.வின் குடியிருப்பு அமைப்பு கூறியுள்ளது.
இன்றைய நகரங்களின் சுற்றுச்சூழல்களைப் பாதிக்கும் தற்போதைய பிரச்சனையாக மட்டுமல்லாமல், மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மனிதாபிமானக் கூறுகளுக்கும் அச்சுறுத்தல்களை முன்வைக்கும் பிரச்சனையாகவும் நகர்ப்புற ஏழ்மை உள்ளது எனவும் இவ்வமைப்பு தெரிவித்தது.
அக்டோபர் 6, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் உலக குடியிருப்பு நாளுக்கென அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. குடியிருப்பு அமைப்பு, கடினமான சூழல்களில் வாழும் நகர்ப்புறச் சேரி மக்களின் அவலநிலைகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்களன்று உலக குடியிருப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.