2014-09-30 15:56:20

ஆயர்கள் மாமன்றத்திற்காகச் செபிக்குமாறு திருப்பீடம் அழைப்பு


செப்.30,2014. “ஒரு கிறிஸ்தவ சமூகத்திற்குள் பிளவு இருப்பது மிகப்பெரிய பாவம்; இது சாத்தானின் வேலை”என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளார்.
மேலும், வருகிற ஞாயிறன்று தொடங்கவுள்ள குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு அனைத்துக் கத்தோலிக்கரையும் கேட்டுக்கொண்டுள்ளது திருப்பீடம்.
அக்டோபர் 5-19 வரை வத்திக்கானில் நடக்கும் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்திற்காக, அம்மாமன்றத்திற்கு முந்திய தினங்களிலும், அம்மாமன்றம் நடைபெறும் நாள்களிலும் திருப்பலி மற்றும் பிற திருவழிபாடுகளில் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது திருப்பீடம்.
இம்மாமன்றம் நடைபெறும் நாள்களில் செபமாலை செபிக்குமாறு அனைத்துக் கத்தோலிக்கரையும் கேட்டுள்ளது திருப்பீடம்.
நற்செய்தி அறிவிப்புச் சூழலில் குடும்பத்திற்கான மேய்ப்புப்பணி சவால்கள் என்ற தலைப்பில் குடும்பம் குறித்த உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம் நடைபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.