நற்செய்தி அறிவிப்புப்பணியில் பங்குகொள்ள விசுவாசிகளுக்கு அழைப்பு
செப்.27,2014. அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் என எல்லாரும் நற்செய்தி அறிவிப்புப்பணியில்
பங்குகொள்ள வேண்டுமென, இந்திய ஆயர் ஒருவர் வேண்டுகோள்விடுத்தார். வருகிற அக்டோபர்
19ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு ஞாயிறையொட்டி மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள
ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா ஆயர் கிஷோர் குமார் குஜூர் அவர்கள், திருமுழுக்குப் பெற்றுள்ள
எல்லாரும் மறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். உலகின்
பல்வேறு நாடுகளில் நடக்கும் மறைபரப்பு நடவடிக்கைகளில் பங்கெடுக்கலாம் அல்லது அவற்றுக்கு
நிதியுதவி செய்யலாம் அல்லது அவற்றுக்காகச் செபிக்கலாம் எனவும் ரூர்கேலா ஆயரின் மேய்ப்புப்பணி
அறிக்கை கூறுகிறது.