செப்.27,2014. திருநற்கருணையில் இயேசுவை சந்திப்பதில் உலகு தனது நம்பிக்கையைக் காண்கிறது
என்று, அனைத்துலக நற்கருணை மாநாட்டு அமைப்பினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 2016ம்
ஆண்டு சனவரியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெறவுள்ள 51வது அனைத்துலக நற்கருணை
மாநாட்டுக்குத் தயாரிப்பாக நடந்த கூட்டத்தின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் இச்சனிக்கிழமையன்று
சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார். திருநற்கருணை, கிறிஸ்தவ நம்பிக்கையின் உணவு,
ஆயினும், இவ்வுணவின் ருசியையும், இவ்வுணவு தரும் நம்பிக்கையையும் இவ்வுலகு பெருமளவு இழந்து
வருகின்றது எனவும் கூறினார் திருத்தந்தை. 2016ம் ஆண்டு சனவரி 25 முதல் 31 வரை நடைபெறவுள்ள
51வது அனைத்துலக நற்கருணை மாநாடு, “நம்மிலுள்ள கிறிஸ்து, நம் மகிமையின் நம்பிக்கை” என்ற
தலைப்பில் இடம்பெறும்.