2014-09-25 15:50:59

ஹிக்கடுவையில் கிறிஸ்தவ ஆலயம் மீது கழிவு எண்ணெய்த் தாக்குதல்



செப்.25,2014. இலங்கையின் ஹிக்கடுவையிலுள்ள கிறிஸ்தவக் கல்வாரி ஆலயம் ஒன்றின் மீது இவ்வியாழன் காலை கழிவு எண்ணெய் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு இந்த ஆலயத்துக்கு எதிராக பொதுபல சேனாவினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக அவ்வாலயம் கடும் சேதமடைந்திருந்தது.
இது தொடர்பான வழக்கு புதனன்று காலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே மீண்டும் அவ்வாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இவ்வாலயத்தின் பங்குத் தந்தை குறி்ப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : தமிழ்வின்








All the contents on this site are copyrighted ©.