2014-09-25 15:49:22

Boko Haram குழுக்களின் வன்செயல்களைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆயர்கள் அழைப்பு


செப்.25,2014. நைஜீரியாவின் குடிமக்கள் பெருமளவில் Boko Haram இஸ்லாம் தீவிரவாதக் குழுக்களால் தொடர்ந்து கொல்லப்படுவதைத் தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நைஜீரிய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பல கிராமங்கள் முற்றிலுமாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஆயர்கள், கோவில்களும், பங்குத்தளங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தனர்.
அப்பாவி மக்கள் தீவிரவாதக் கும்பல்களால் கொல்லப்படுவதைத் தடை செய்யப் போதுமான நடவடிக்கைகளை நைஜீரிய அரசு மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டும் அந்நாட்டு ஆயர்கள், நாட்டையும் மக்களையும் காப்பாற்ற, மேலும் தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன எனவும் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம் : CWN








All the contents on this site are copyrighted ©.