செப்.23,2014. “கருணையும் பரிவன்பும்” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிலிப்பைன்ஸ்
நாட்டுத் திருப்பயணத்தின் தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற சனவரி 15 முதல் 19
வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் பிலிப்பைன்ஸ் நாட்டுத் திருப்பயணத்தின்
கருப்பொருளாக இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதோடு, புதிய இணையதளம்(www.papalvisit.ph)
ஒன்றையும் திறந்துள்ளதாக, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது. இத்தலைப்பு பற்றிப்
பேசிய பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் ஊடகத்துறைத் தலைவர் ஆயர் Mylo Vergara அவர்கள், திருத்தந்தையின்
பிரசன்னத்தால், இறைவனின் கருணையும் பரிவன்பும் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அருளப்படும் எனக்
கூறினார். மேலும், 2015ம் ஆண்டு சனவரி 13 முதல் 15 வரை திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் மேற்கொள்ளும் இலங்கைத் திருப்பயணத்தின் கருப்பொருள், “என் அன்பில் நிலைத்திருங்கள்”
என்பதாகும்.