நைஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் மனிதாபிமான நெருக்கடி
செப்.22,2014. வடகிழக்கு நைஜீரியாவின் 25 நகர்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாகவும்,
பெரும் மனிதாபிமான நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருவதாகவும் கூறினார் அப்பகுதி ஆயர்
Oliver Dashe Doeme. ஈராக் மற்றும் சிரியாவில் ISIS இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கொலைச்
செயல்களை ஒத்ததாக நைஜீரியாவில் Boko Haram நடத்தும் செயல்களும் உள்ளன என்றார் ஆயர். இஸ்லாம்
தீவிரவாதிகளின் கொடுமைகளிலிருந்து தப்பித்துள்ள மக்கள் குகைகளிலும், குன்றுகளிலும், காடுகளிலும்
வாழ்ந்துவருவதாகவும், கேம்ரூன் நாட்டிற்கு தப்பிச்சென்ற மக்கள்கூட போதிய உணவு, தங்குமிடம்
மற்றும் மருத்துவ உதவிகள் இன்றி துன்புறுவதாகவும் உரைத்தார் Maiduguri ஆயர் Dashe Doeme.