2014-09-20 15:51:52

மியான்மாரின் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கர்தினால் கிரேசியஸ்


செப்.20,2014. மியான்மாரில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கென, தனது பிரதிநிதியாக, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகிற நவம்பர் 21முதல் 23ம் தேதிவரை யாங்கூனில் நடைபெறும் நிகழ்வுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வார் கர்தினால் கிரேசியஸ்.
மேலும், “அன்பு இளையோரே, உங்கள் இதயம் பேசுவதற்குச் செவிசாயுங்கள், ஏனெனில் உங்கள் இதயக் கதவை கிறிஸ்து தட்டிக்கொண்டிருக்கிறார்” என்ற வார்த்தைகளை, தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று பதிவுசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.