வத்திக்கானும் இரஷ்யாவும் இணைந்து விவிலியக் கலைக்கண்காட்சி
செப்.18,2014. 2016ம் ஆண்டில் வத்திக்கானுடன் இணைந்து இரஷ்யா விவிலியக் கலைப்படைப்புக்களுடன்
கண்காட்சி ஒன்றை நடத்தவுள்ளதாக இரஷ்ய அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதி அறிவித்தார். விவிலியம்
தொடர்புடைய கலைப்படைப்புகளின் கண்காட்சியை இவ்விரு நாடுகளும் 2016ல் இணைந்து நடத்தும்
என்றார் இரஷ்ய அதிகாரி Mikhail Shvydkoy. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரஷ்ய அதிபர்
Vladimir Putin திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இத்திட்டம்
குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.