2014-09-18 16:38:31

இந்தியாவில் இயற்கைப் பேரிடர்களால் 2013-ல் 20 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு


செப்.18,2014. கடந்த ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் ஏறத்தாழ 20 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து, தங்கள் நாட்டிலேயே பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் சுமார் 20 இலட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலக அளவில் இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளால் மக்கள் இடம்பெயர்ந்த நிலை குறித்து ஐ.நா. நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது குறித்துத் தெரிவித்துள்ளதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை அடுத்து, இந்தியாவில்தான் அதிக அளவிலான மக்கள் இடம்பெயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் நோக்கும்போது, கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் நிகழ்வுகளால் 2 கோடியே 20 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.