செப்.18,2014. ‘கடவுளின் குழந்தைகளுக்குரிய சுதந்திரத்துடன் நாங்கள் நடைபோடும்போது, மகிழ்வுடன்
இருப்பதற்கான அருளை அன்னைமரியே எமக்கு வழங்கியருளும்’என இவ்வியாழனன்று தன் டுவிட்டர்
செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். ஏறத்தாழ ஒவ்வொரு நாளும்
9 மொழிகளில் தன் குறுஞ்செய்திகளை டுவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுவருகிறார் திருத்தந்தை
பிரான்சிஸ்.