2014-09-12 16:30:05

புதிதாகப் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட திருத்தந்தையர்களின் திருநாள்கள் அறிவிப்பு


செப்.12,2014. புனித திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களின் திருவிழா அக்டோபர் 11ம் தேதி எனவும், 2ம் ஜான் பால் அவர்களின் திருவிழா அக்டோபர் 22ம் தேதி எனவும், வத்திக்கான் அறிவித்துள்ளது.
உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வந்த எண்ணற்ற விண்ணப்பங்களின் பேரில், அகிலத் திருஅவையின் திருநாள்கள் நாட்காட்டியில், இவ்விரு திருத்தந்தையர்களின் திருநாள்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கரீத்துள்ளார் என திருப்பீட திருவழிபாட்டு பேராயம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் புதிதாகப் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரின் திருநாள்கள் விருப்ப நினைவு நாள்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.