2014-09-12 16:30:18

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்குத் தலத்திருஅவை உதவி


செப்.12,2014. பாகிஸ்தானில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையை செப நாளாகக் கடைப்பிடித்தது அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருஅவை.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இம்மாதம் 5ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்கினால் ஏறக்குறைய 1413 வீடுகள் கடுமையாய்ச் சேதமடைந்துள்ளன, 250க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும் 55 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ள இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி ஆயர் ரூஃபின் அந்தோணி அவர்கள், அம்மக்களுக்குத் தேவையான உதவிகளை காரித்தாஸ் அமைப்பு செய்து வருவதாகவும் கூறினார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.